மூலனூர் விற்பனைக் கூடத்தில் ரூ. 36 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 36 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை பருத்தி விற்பனை செய்யப்பட்டது. 

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 36 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை பருத்தி விற்பனை செய்யப்பட்டது. 
 இந்த வார ஏலத்துக்கு திண்டுக்கல், கரூர், மணப்பாறை, அரவக்குறிச்சி, தாராபுரம், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 149 விவசாயிகள் தங்களது 1,787 மூட்டை பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
 பொள்ளாச்சி, திண்டுக்கல், திருப்பூர், உடுமலைப்பேட்டை, காரமடை உள்ளிட்ட இடங்களில் இருந்து 10 வணிகர்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனர். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
 குவிண்டால் ரூ. 5,109 முதல் ரூ. 6,769 வரை விற்பனையானது. இதன் மொத்த விற்பனைத் தொகை ரூ. 36 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com