திருப்பூரில் டிசம்பர் 23 முதல் மகாலட்சுமி யாகம்,  1008 கோமாதா பூஜை

இந்துமுன்னணி சார்பில் திருப்பூரை அடுத்த பொங்கலூர் பயணியர் தில்லைநகரில் லட்சம் குடும்பங்கள்

இந்துமுன்னணி சார்பில் திருப்பூரை அடுத்த பொங்கலூர் பயணியர் தில்லைநகரில் லட்சம் குடும்பங்கள் பங்கேற்கும் ஷோடச ஸ்ரீமகாலட்சுமி மகா யாகம் , 1008 கோமாதாபூஜை, கஜபூஜை, 108 அஷ்வபூஜை ஆகியவை டிசம்பர் 23 முதல் 25ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளன. 
 இப்பூஜைக்கு அனைவரையும் அழைக்கும் விதத்தில் திருப்பூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் புதிய திருப்பூர் பேருந்து நிலையம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு அழைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சேவுகன் தலைமை வகித்தார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் முருகேசன்,  செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக சொற்பொழிவாளர் அனந்தகிருஷ்னன் சிறப்புரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com