வெள்ளக்கோவிலில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முத்தூர் சாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முகாமுக்கு காங்கயம் வட்ட வழங்கல் அலுவலர் பிரபு தலைமை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். முகாமில், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, சர்க்கரை அட்டையை அரிசி பெறும் அட்டையாக மாற்ற வேண்டியும் 14 பேர் விண்ணப்பம் செய்தனர். இவை அனைத்துக்கும் உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
வெள்ளக்கோவில் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் முகாமில் பங்கேற்றனர்.