"சாதனைப் பெண் பாரதி' எனும் நூல் வெளியீட்டு விழா உடுமலையில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது.
உடுமலை, வஉசி வீதியில் உள்ள ராமய்யர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கே.பழனியப்பன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற கோட்டப் பொறியாளர் ஆர்.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
இதைத் தொடர்ந்து, "சாதனைப் பெண் பாரதி' எனும் நூலை துரை அங்குசாமி வெளியிட ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சுபாஷ் சந்திரபோசு பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் கே.நடராசு ஏற்புரையாற்றினார்.