திருப்பூர்
பாரதியார் நினைவு தினம்
உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகம் எண் 2இல் பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகம் எண் 2இல் பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நூலகர் வீ.கணேசன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் வி.கே.சிவகுமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, பாரதியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து, மாணவ, மாணவிகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.