உடுமலை அருகே மலையாண்டிகவுண்டனூரில் உள்ள பொன்னாவரசு பள்ளியில் இண்ட்ராக்ட் சங்கப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத்தின் மாணவர் அமைப்பான இதில் முன்னாள் ரோட்டரி மாவட்டச் செயலாளர் மருத்துவர் சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். இதையொட்டி, முதல் உதவி எனும் தலைப்பில் ஒலி, ஒளிக் காட்சி மாணவ, மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
ரோட்டரி நிர்வாகிகள் பாலமுருகன், ஸ்ரீகுமரன், சக்ரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.