மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மதத்தினர் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் திருப்பூர் ஸ்ரீ நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர், ஸ்ரீ நகரில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 20ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநகரத் தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஜமால், கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோர் விசர்ஜன ஊர்வலத்தை தொடக்கிவைத்தனர்.
இதில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சுதாகர், மாநகரச் செயலாளர் முருகபாண்டி, இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் மனோகரன், திமுக பொறுப்பாளர் காந்தி, அதிமுக பொறுப்பாளர் பிரபு, பசும்பொன் பக்தர் பேரவை லஷ்மணன், ஸ்ரீ கருப்பண்ண சாமி ஐயப்பா சேவா சங்க அறக்கட்டளைப் பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.