இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட  விபத்தில் இளைஞர் சாவு: 4 பேர் படுகாயம்

சேவூரை அடுத்த ராமியம்பாளையத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் உயிரிழந்தார்.

சேவூரை அடுத்த ராமியம்பாளையத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் உயிரிழந்தார்.
சேவூரை அடுத்த தண்டுக்காரம்பாளையம் கிட்டான் மகன் ஜெயசூர்யா (20). ரங்கசாமி மகன் மயில்சாமி (22). இவர்கள் இருவரும் மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும்  இருசக்கர வாகனத்தில் தண்டுக்காரம்பாளையத்தில் இருந்து சேவூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 
ராமியம்பாளையம் அருகே வரும் போது, சேவூரில் இருந்து தண்டுக்காரம்பாளையம் நோக்கி வந்த இருசக்கர வாகனம், ஜெயசூர்யா வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இவரது நண்பர் மயில்சாமி, எதிரே வாகனத்தில் வந்த ராமியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணபதியப்பன் மகன் ஜெயக்குமார்(40) மற்றும் இவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம் அடைந்த திருப்பூர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com