உடுமலையை அடுத்துள்ள வாளவாடியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 18 வது அமைப்பு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் மற்றும் நிழற்குடைகள், சந்தைப் பேட்டை வளாகம், நியாய விலைக் கடை, நூலக வளாகம், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகம், அங்கன்வாடி மைய வளாகம் ஆகிய பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து அமைப்பு தின விழா பொதுக் கூட்டம் வாளவாடி அரிமா சங்கம் முன்பு நடைபெற்றது.
கோட்டத் தலைவர் கே.வெங்கிடுசாமி தலைமை வகித்தார். உட்கோட்டத் தலைவர் கே.செல்லமுத்து வரவேற்றார். இதில் கோட்டச் செயலாளர் எல்.தில்லையப்பன் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பல்வேறு அமை ப்புக்கள் சார்பில் நிர்வாகிகள் பேசினர்.
மாநிலத் தலைவர் ஏ.அம்சராஜ், பொதுச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியம், செயலாளர் வே.கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக திங்கள்கிழமை காலை உடுமலை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கொடியேற்று விழா நடைபெற்றது.