டாஸ்மாக் மதுக்கடை திறக்க பாமக எதிர்ப்பு

கடத்தூர் அருகேயுள்ள புட்டிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடத்தூர் அருகேயுள்ள புட்டிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம் அருகே, புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து, பாமகவினர் டாஸ்மாக் மதுக்கடை திறக்கவுள்ள கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதில், பாமக உழவர் பேரியக்கத்தின் மாநிலச் செயலர் இல.வேலுசாமி, மாநில துணைத் தலைவர் ரா.அரசாங்கம், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலர் ஏ.வி.இமயவர்மன், ஒன்றியச் செயலர் வஜ்ஜிரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com