அரூரில் வண்ணச் சிட்டுகளை பிடித்து வைத்திருந்த 2 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
அரூர் ஆத்தோர வீதியைச் சேர்ந்த கண்ணப்பன், உஷா ஆகியோர், பட்டியல் 4-இல் வகைப்படுத்தப்பட்ட அரியவகை வண்ணச் சிட்டுகளை பிடித்து வைத்திருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கண்ணப்பன் மற்றும் உஷா ஆகியோர் வீட்டில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 1,000-க்கும் மேற்பட்ட அரியவகை வண்ணச் சிட்டுகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். அரியவகை வண்ணச் சிட்டுகளை பிடித்து வைத்திருந்த குற்றத்துக்காக கண்ணப்பன், உஷா ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து அரூர் மாவட்ட வன அலுவலர் எஸ்.செண்பகப்பிரியா உத்தரவிட்டார்.