வண்ணச் சிட்டுகளை பிடித்த 2 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

அரூரில் வண்ணச் சிட்டுகளை பிடித்து வைத்திருந்த 2 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.

அரூரில் வண்ணச் சிட்டுகளை பிடித்து வைத்திருந்த 2 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
 அரூர் ஆத்தோர வீதியைச் சேர்ந்த கண்ணப்பன், உஷா ஆகியோர், பட்டியல் 4-இல் வகைப்படுத்தப்பட்ட அரியவகை வண்ணச் சிட்டுகளை பிடித்து வைத்திருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
 இதையடுத்து, கண்ணப்பன் மற்றும் உஷா ஆகியோர் வீட்டில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 1,000-க்கும் மேற்பட்ட அரியவகை வண்ணச் சிட்டுகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். அரியவகை வண்ணச் சிட்டுகளை பிடித்து வைத்திருந்த குற்றத்துக்காக கண்ணப்பன், உஷா ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து அரூர் மாவட்ட வன அலுவலர் எஸ்.செண்பகப்பிரியா உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com