'ஏப்.25-இல் முழுஅடைப்புப் போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்'

வரும் ஏப்.25-ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில், அனைவரும் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வரும் ஏப்.25-ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில், அனைவரும் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அண்மையில் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், அவைத் தலைவர் ஜி.வி.மாதையன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ, பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பசேகரன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வரும் ஏப்.25-இல் நடைபெற உள்ள முழுஅடைப்புப் போராட்டத்தில், அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்க செய்ய வேண்டும். மாவட்டத்தில் நிலவும் வறட்சி, குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும், கழிவுநீர்க் கால்வாய்களை முறையாக தூர்வாரி, குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com