தருமபுரி மாவட்டம், பங்குநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இண்டூர் வட்டாரக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டாரப் பொருளர் எம்.மாதையன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.தேவராசன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.மாதேஸ்வரன், எஸ்.சின்னசாமி, வட்டாரப் பொறுப்பாளர் எம்.சிவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும். கறவை மாட்டுக் கடன், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு உள்ளிட்ட நீண்டகாலக் கடன்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக் கடன், நகைக் கடன் ஆகியவற்றை அனைவருக்கும் வழங்க வேண்டும்.
தட்டுப்பாடின்றி உரம், யூரியா மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும்.