உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ) அ.சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ) அ.சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
 விண்ணப்பங்களை வரும் ஆக. 24-ஆம் தேதிக்குள், தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் அல்லது அரூர் திட்ட அலுவலகத்தில் அளிக்கலாம்.
 இதைத் தொடர்ந்து வரும் ஆக. 31-ஆம் தேதி சென்னையிலுள்ள பழங்குடியினர் நல இயக்குநர் அலுவலகத்தில் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com