மொரப்பூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவர் காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனிசாமி (50) . இவருக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவரது 7-ஆவது மகன் வெற்றிவேல் (13), மொரப்பூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்கி, மருதிப்பட்டியில் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியி 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற மாணவர் வெற்றிவேல், இம் மாதம் 9-ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்து அவரது தந்தை பழனிசாமி அளித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.