பள்ளிக்குச் சென்ற மாணவர் மாயம்

மொரப்பூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவர் காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.

மொரப்பூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவர் காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
 சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனிசாமி (50) . இவருக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவரது 7-ஆவது மகன் வெற்றிவேல் (13), மொரப்பூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்கி, மருதிப்பட்டியில் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியி 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற மாணவர் வெற்றிவேல், இம் மாதம் 9-ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்து அவரது தந்தை பழனிசாமி அளித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com