அரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம்

அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணிகள் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணிகள் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.எம்.ராணி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் முகாமில், பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டது.
மேலும், பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. தீர்த்தமலை சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கு.கலையசரன், மாணவிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் என்.முருகன், உதவி திட்ட அலுவலர் டி.செல்வம், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com