மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
வேலூரில் அண்மையில் மண்டல அளவிலான பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஹாக்கி போட்டி நடைபெற்றது.
இதில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனர். மேலும், மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனர். கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.ரங்கநாதன், மேலாண் இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் மாணவர்களை பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் கல்லூரிச் செயலர் மணிமாலன், சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.