அம்பேத்கர் நினைவு தினம்: அரசியல் கட்சிகள் அஞ்சலி

அம்பேத்கர் நினைவுநாளையொட்டி,  தருமபுரியில் அதிமுக, திமுக, திக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் புதன்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கர் நினைவுநாளையொட்டி,  தருமபுரியில் அதிமுக, திமுக, திக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் புதன்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தருமபுரி அரசு மருத்துவமனை அருகே அம்பேத்கர் சிலைக்கு, அதிமுக சார்பில் நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல, திமுக சார்பில் நகரச் செயலர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் உள்ளிட்டோர், அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மொரப்பூரில்.. மொரப்பூரில் காங்கிரஸ் கட்சி, டாக்டர் அம்பேத்கர் நினைவு அறக்கட்டளை சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இளைஞர்களுக்கு டி.என்.பி.எஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வழங்கினர்.
இதில், கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.முத்து, அறக்கட்டளையின் தலைவர் ஜெட்லி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரூரில்... அரூர் கச்சேரி மேடு சாலை சந்திப்பில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு இந்திய குடியரசுக் கட்சியின் (பி.வி.கே அணி) மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதில், மாநில செயல் தலைவர் கே.கருமலை, இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வட்டச் செயலர் கோ.வெங்கடாசலம்,  இந்திய கம்யூ. கட்சி ஒன்றியச் செயலர் என்.அல்லிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். மல்லிகா, அன்னை தெரசா பேரையின் மாநில செயலர் தேசம் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில்.. தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.டி, எஸ்.சி. பிரிவின் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் சுப்பிரமணி தலைமையில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில பொதுக் குழு உறுப்பினர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அக் கட்சியின் இளைஞரணி சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பழனிகுமார், உள்ளிட்டோர் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஊத்தங்கரையில்... விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தொழிலாளர்  விடுதலை முன்னனி மாநிலத் துணைச் செயலாளர் சா. அசோகன், மகளிர் விடுதலை  இயக்கம் மாநிலத் துணைச் செயலாளர் மா. ஜெயலட்சுமி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பயிற்சி  இரா. துரைவளவன் ஆகியோர் நான்கு முனை சந்திப்பில் அம்பேத்கர் உருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், மாவட்டத் துணைச் செயலாளர்  ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் இரா.முனிராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு எஸ்.சி.எஸ்.டி அலுவலர் நலச்சங்கத்தினர் மலர் தூவி  அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தார். மாநில நிலவள வங்கித் தலைவர் சாகுல் அமீது, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணி, தொகுதி செயலாளர் திருஞானம், நகரச் செயலாளர் சிவானந்தம்  உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com