தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பில் தூய்மை பணி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகம் அருகே இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தொடங்கி வைத்து, தூய்மை இந்தியா திட்டம் குறித்து எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து, அப்பாவுநகர், கலைக்கல்லூரி கூடுதல் கட்டடம் மற்றும் பள்ளி வாளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தேசிய மாணவர் படை அலுவலர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.