தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், வரும் டிச. 13-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்கில் 37 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை வரும் 13-ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகின்றன. நான்கு சக்கர வாகனத்துக்கு முன் வைப்புத்தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை அன்றைய தினம் காலை 8 மணிக்கு நேரில் பார்வையிடலாம். முன்வைப்புத் தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும், ஏலம் எடுப்பவர்கள் ஏலத் தொகையுடன் 12 சதவீதம் விற்பனை வரி மற்றும் விற்பனை வரிக்கு 5 சதவீத சேவை வரியை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தொடர்புக்கு: 04342 230759.