டேக்வோண்டோ போட்டியில் தருமபுரி டான் சிக்ஷாலயா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கிடேயேயான டேக்வோண்டோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இப்போட்டியில் பங்கேற்ற டான் சிக்ஷாலயா பள்ளி மாணவர்கள் பிரவின் 36 கிலோ பிரிவிலும், நிஜந்தன் 21 கிலோ பிரிவிலும், அஜய் வியாஸ் 36 கிலோ பிரிவிலும், மாணவி ஜனனி 41 கிலோ பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றனர். அதேபோல, ஸ்ரீவிசாகன் 31 கிலோ பிரிவிலும், அப்துல் ஆஜிஸ் 42 கிலோ பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குருபிரசாத் 20 கிலோ பிரிவிலும், விகாசினி 31 கிலோ பிரிவிலும் வெண்கலம் வென்றனர்.
இம்மாணவர்களை பள்ளி நிறுவனத் தலைவர் என்.ராஜேந்திரன், தாளாளர் உதயகுமார், செயலர் சவீதா உதயகுமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.