தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் பலி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே வியாழக்கிழமை தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே வியாழக்கிழமை தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.
 அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குணசேகரன். இவரது மகன் யஸ்வந்த் (5), அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவர் வீட்டிலிருந்து வழக்கம்போல பள்ளிக்கு சென்ற போது, அவ்வழியே வந்த தனியார் கல்லூரி பேருந்து சிறுவன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com