தருமபுரி மாவட்டத்திலுள்ள ஊர்ப்புற நூலகங்களில் புரவலர்களாக 3 பேர் இணைந்துள்ளனர்.
பென்னாகரம் வட்டம் சின்னம்பள்ளி ஊர்ப்புற நூலகத்தில், முன்னாள் கவுன்சிலர் வசந்தா செல்வராஜ், ரூ. 1000-ஐ நூலகர் முருகனிடம் அளித்து நூலகத்தின் 20ஆவது புரவலராக இணைந்தார். அப்போது வாசகர் வட்டத் தலைவர் அலெக்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். நல்லம்பள்ளி வட்டம் பூச்செட்டிஅள்ளி ஊர்ப்புற நூலகத்தில், எம். சிவராமன் என்பவர் ரூ. 1000-ஐ நூலகர் க. கண்ணகியிடம் அளித்து நூலகத்தின் 6ஆவது புரவலராக இணைந்தார். தருமபுரி நாய்க்கன்கொட்டாய் ஊர்ப்புற நூலகத்தில், மென்பொறியாளர் க. ராஜா என்பவர் ரூ. 1000-ஐ நூலகர் மு. குமரனிடம் வழங்கி நூலகத்தின் 16ஆவது புரவலராக இணைந்தார். அப்போது வாசகர் வட்டத் தலைவர் சு. சக்திவேல், துணைத் தலைவர் முருகன், கூட்டுறவு வங்கிச் செயலர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர். இவர்கள் மூவரையும் மாவட்ட நூலக அலுவலர் ஜெ. கார்த்திகேயன் புரவலர்களாக அனுமதித்து வாழ்த்து தெரிவித்தார்.