தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அருகில் பேருந்து நிறுத்தம் அமைக்க சாலை விரிவாக்கம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன், இரு புறமும் பேருந்து நிறுத்தம் அமைக்க சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன், இரு புறமும் பேருந்து நிறுத்தம் அமைக்க சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து நிறுத்தம், நகரிலிருந்து செல்லும்போது நிலவள வங்கி அருகிலும், நகருக்குள் வரும் சாலையில் வெண்ணாம்பட்டி பிரிவு சாலை அருகிலும் உள்ளது. இவ்விரு பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்கும்போது, இட நெருக்கடி காரணமாக, சாலையிலேயே பேருந்துகள் நிற்க வேண்டியுள்ளது. இதனால், அச்சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
 இதனைத் தவிர்க்கும் வகையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் முன் சுற்றுச் சுவரையொட்டியும், அதேபோல, எதிரில் உள்ள சாலையிலும் பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 இப்பணிகளுக்காக, சாலையின் இரு புறமும் சுமார் 400 மீட்டர் நீளத்துக்கு 24 அடி அகலத்தில் சாலை விரிவாக்கம் செய்யம் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் இச்சாலையில் நகரப்பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்க ஏதுவாக பேருந்துகள் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் நிறைவடைந்து பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டால், நேதாஜி புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
 இதேபோல, பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள சாலையில், காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, அந்த சாலையை போதிய அளவுக்கு விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com