காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தருமபுரியில் வியாழக்கிழமை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது.
காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 27-ஆம் தேதி காலை 6 மணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.
கோவை மண்டல ஐ.ஜி. பாரி முன்னிலையில் நடைபெற உள்ள இந்தப் பணிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் மற்றும், 250 போலீஸார் புதன்கிழமை மாலை முதல் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வு பணியில் 150 பேர் பயன்படுத்தப்பட உள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.