நாளை விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ.சங்கர் தெரிவித்தார்.

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ.சங்கர் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ஜூலை 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை மற்றும் அனைத்துத்துறைஅரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com