தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ.சங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ஜூலை 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை மற்றும் அனைத்துத்துறைஅரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்றார்.