ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் வருகிற ஜூன் 20-ஆம் தேதி வேலூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மின் பகிர்மான வட்ட கூடுதல் தலைமைப் பொறியாளர் ப.சின்னத்தம்பி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மின் பகிர்மான வட்டத்திற்குள்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள், பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் வருகிற ஜூன் 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு வேலூர் மின் பகிர்மான வட்ட கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
எனவே, ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.