தருமபுரியில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் சனிக்கிழமை அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் சனிக்கிழமை அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஏ. குமார் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா. சிசுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் பொ.மு. நந்தன், மாவட்டச் செயலர் த. ஜெயந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் கா.சி. தமிழ்க்குமரன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலர் ஊமை ஜெயராமன், மாவட்டத் தலைவர் சிவாஜி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் சாதிக் பாட்ஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் அன்வர் பாட்ஷா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் சாதிக்பாட்ஷா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் வடிவேல் உள்ளிட்டோர் பேசினர்.
 பெட்ரோல் குண்டு வீசியோரை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com