பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காண்ட்லா செட்டியார் சமூக நலச் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வில்

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காண்ட்லா செட்டியார் சமூக நலச் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பிளஸ் 2 தேர்வில் 1177 மதிப்பெண் பெற்ற மாணவி எஸ். கீர்த்தனா, 1166 மதிப்பெண் பெற்ற மாணவி ஜி. ஹரிபிரியா, 1164 மதிப்பெண் பெற்ற வி. கீதபிரியா மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வில் 495 மதிப்பெண் பெற்ற மாணவர் வி. மஞ்சுநாதா, 492 மதிப்பெண் பெற்ற மாணவிகள் ஜெ. விஸ்வபிரியா, எஸ். குணபிரியா, 491 மதிப்பெண் பெற்ற வி. சம்யுக்தா உள்ளிட்ட 59 பேருக்கு ரொக்கப் பரிசு, கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.
 சங்க நிர்வாகிகள் நடராஐன், சதீஷ், சிவராமன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு இவற்றை வழங்கிப் பாராட்டினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com