மாநில விருது பெற்ற சிறார் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்ட இயக்குநர், மேலாளர் ஆகியோருக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் பாராட்டு தெரிவித்தார்.
சிறார் தொழிலாளர் முறை ஒழிப்பில் 2016-17-ஆம் ஆண்டு சிறப்பாகப் பணியாற்றியதற்காக தருமபுரி மாவட்ட தேசிய சிறார் தொழிலாளர் ஒழிப்புத் திட்ட இயக்குநர் ந.சரவணன், திட்ட மேலாளர் தே. சரவணன், தருமபுரி மாவட்ட தன்னார்வ ஆசிரியர் குணவதி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,157 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மோகன்ராஜ், எஸ்எஸ்எல்சி தேர்வில் 476 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சு.லோகேஷ்வரி ஆகியோருக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி சென்னையில் மாநில அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் விருது வழங்கினார்.
மாநில விருது பெற்ற இவர்களை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், அண்மையில் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பொன்னுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.