தருமபுரி அருகே நாகாவதி அணையில் மூழ்கி, கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இண்டூர் அருகே எர்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மாதேஷ் (36). இவர், தனது நண்பர்கள் சிலருடன் நாகாவதி அணையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, திடீரென சகதியில் சிக்கிய அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த இண்டூர் போலீஸார், நிகழ்விடத்துக்கு சென்று, உயிரிழந்த மாதேஷின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.