இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இருவர் பலி

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
 தருமபுரி மதிகோன்பாளையத்தைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் பரமசிவம் (38). இவர் தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில், தருமபுரி -பாலக்கோடு சாலையில் உள்ள சவுளூருக்கு சென்று விட்டு, தருமபுரி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்.
 அப்போது, சவுளூர் மேம்பாலம் அருகே வந்தபோது, எதிரே தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
 இந்த விபத்தில், பலத்த காயமுற்ற பரமசிவம் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
 இதுகுறித்து, தகவல் அறிந்த, தருமபுரி நகர போலீஸார், நிகழ்விடத்துக்கு வந்து, உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பரமசிவத்துடன் சென்ற அவரது நண்பர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com