அரூர்
அரூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அரூர் வட்டாரப் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அரூர் நகர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, எல்லப்புடையாம்பட்டி, கீரைப்பட்டி, சித்தேரி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.