ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளை ஒட்டி தருமபுரியில் திங்கள்கிழமை அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளை ஒட்டி தருமபுரியில் திங்கள்கிழமை அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
 காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சிற்றரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் செந்தில்குமார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ராஜ வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வகுப்புவாத எதிர்ப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 போச்சம்பள்ளியில் ...
 காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 48-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நான்கு வழிச் சாலையில் தென்னங்கன்றுகள் வழங்கி காங்கிரஸார் கொண்டாடினர்.
 விழாவுக்கு பர்கூர் வட்டாரத் தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் ரவி, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார் மாவட்டப் பொதுச் செயலர் மனோகரன் தென்னங்கன்றுகளை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் முருகேசன், ராமன், ஞானம், நகர பொறுப்பாளர் மாது தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலர் ஞானம் நன்றி கூறினார். மத்தூரில் வட்டாரத் தலைவர் லோகநாதன் தலைமையில் சபாபதி, முருகேசன், பெருமாள், செல்வம், மகேந்திரன், அக்பர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com