மொரப்பூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஒடசல்பட்டி புதூரைச் சேர்ந்தவர் மாரிக்கவுண்டர் மகன் பெருமாள் (97). இவர், ஒடசல்பட்டி- கம்பைநல்லூர் சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் மோதியதில் பெருமாள் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.