தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 30ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் , விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.