கைப்பந்து தேர்வுப் போட்டி: 76 பேர் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கைப்பந்து வீரர்கள் தேர்வுப் போட்டியில் 76 பேர் பங்கேற்றனர்.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கைப்பந்து வீரர்கள் தேர்வுப் போட்டியில் 76 பேர் பங்கேற்றனர்.
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக சிறந்த வீரர், வீராங்கனைகளை கண்டறிதல் திட்டத்தின் கீழ், கைப்பந்து தேர்வுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. இத்தேர்வுப் போட்டிகளில் 49 வீரர்கள், 27 வீராங்கனைகள் பங்கேற்ற விளையாடினர்.
 இப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மாதம் 25 நாள்கள் பயிற்சி வழங்கப்படும். மேலும், பயிற்சியின்போது, சத்தான உணவு வகைகள், சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com