கிருஷ்ணகிரியில் வரும் 24-ஆம் தேதி 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவைக்கான ஆள்கள் தேர்வு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவையில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு வரும் 24-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. மருத்துவர் உதவியாளர் பணியிடத்துக்கு நேர்முகத் தேர்வு அன்று 19 வயது முதல் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும். பி.எஸ்சி., செவிலியர், விலங்கியல், தாவரவியல் மற்றும் பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட தகுதியான கல்வித் தகுதி முடித்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். அதேபோல, ஓட்டுநர் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற, 23 முதல் 35 வயது மிகாமல் உள்ள ஆண்கள் கலந்து கொள்ளலாம்.
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களுடைய கல்விச் சான்று மற்றும் அனுபவம் தொடர்பான சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். முகாமில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமன ஆணை அன்றைய தினமே வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு: 7397724814, 7397724804, 9338873089 என்ற செல்லிடப்பேசி எண்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.