10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தருமபுரி மாவட்டம் 94.25 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 207 அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் 6, ஒரு ஆதிதிராவிடர் நலப் பள்ளி, பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளி 4, ஒரு சமூக நலத் துறைப் பள்ளி, 17 சுயநிதிப் பள்ளிகள், 66 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 302 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளைச் சேர்ந்த 11,885 மாணவர்கள், 10,007 மாணவியர் என மொத்தம் 22,893 பேர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இதில், 21,577 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 94.25 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.68. மாணவியரின் தேர்ச்சி சதவீதம் 94.87. வழக்கம்போல மாணவியரே அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர் மொத்தம் 94.77 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். நிகழாண்டு 0.52 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
அதேபோல, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 92.52 ஆகும். மாவட்டத்தில் 56 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 118 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளன. மாவட்ட அளவில் பாடவாரியாக, தமிழ் 97.08 சதவீதம், ஆங்கிலம்-98.86, கணிதம்-96.07, அறிவியல்-99.77 மற்றும் சமூக அறிவியல்-98.66 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில், அறிவியல் பாடத்தில் அதிகளவு மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.