ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி நூறு சதம் தேர்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 இந்தப் பள்ளி மாணவி 500-க்கு 496 மதிப்பெண்களை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவி ஒருவர் 495 மதிப்பெண்களும், மாணவிகள் 2 பேர் 493 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 18 பேரும், அறிவியல் பாடத்தில் 16 பேரும், கணிதம் பாடத்தில் 8 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும், 490-க்கு மேல் 10 பேரும், 480-க்கு மேல் 24 பேரும், 450-க்கு மேல் 43 பேரும், 400-க்கு மேல் 60 பேரும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவியர்களை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜி.பிரபாகரன், பள்ளி முதல்வர், மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com