பாளேத்தோட்டம் அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
போச்சம்பள்ளியை அடுத்த பாளேத்தோட்டம், அரசுப் பள்ளியில் நடைபெற்ற குறுவள மைய அளவிலான கண்காட்சியில் 15-க்கும் மேற்ப்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன.
இதில் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட இயற்கை உணவுகளை வகைபடுத்தி மாணவர்கள்ஆர்வத்துடன் வைத்திருந்தனர். ஆசிரியர் பயிற்றுநர் ஜெயமணி, சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை பாராட்டினர்.
இதில் முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பில் மாவுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முதல் பரிசும், பி.திப்பம்பட்டி பள்ளி 2-ஆம் பரிசும், பாளேத்தோட்டம், பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றன. கரடனூர் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது.
6 முதல் 8-ஆம் வகுப்பில் தாதம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி முதல் பரிசும், பாளேத்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி 2-ஆம் பரிசும், கெங்கிநாயன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றன. கெங்கிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 15 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.