காவலர் நல நிதி, கல்வி உதவித் தொகை அளிப்பு

காவலர் நல நிதி மற்றும் கல்வி உதவித்தொகை ரூ.4,83,000 வியாழக்கிழமை மாவட்ட காவல் துறை சார்பில் வழங்கப்பட்டது.

காவலர் நல நிதி மற்றும் கல்வி உதவித்தொகை ரூ.4,83,000 வியாழக்கிழமை மாவட்ட காவல் துறை சார்பில் வழங்கப்பட்டது.
மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பியவர்களின் மருத்துவ செலவுக்கான நிதியாக, பாலக்கோடு காவல் நிலைய தலைமைக் காவலர் கே.வேலனுக்கு ரூ.68,935, மாவட்ட குற்றப் பதிவறை கூடம் தலைமைக் காவலர் விஜயகுமாருக்கு ரூ.1,84,190, பென்னாகரம் காவல் நிலைய தலைமைக் காவலர் கே.பரமசிவத்துக்கு ரூ.80,003 என ரூ.3,33,128 மற்றும் ஆறு காவலர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.25,000 வீதம் ரூ.1,50,000 என மொத்தம் ரூ.4,83,128-க்கான காசோலைகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com