சாமியாபுரம் கூட்டுச் சாலையில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் காளிப்பேட்டை, கோம்பூர், மஞ்சவாடி, சாமியாபுரம், பட்டுகோணம்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 10 மணியளவில் கூத்தாண்டவர் சுவாமி தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் சுவாமியின் தலை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு ஆட்டுக்கிடா பலியிட்டு பூஜைகள் செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.