டிச. 21, 22, 23-இல் பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் மாவட்ட மாநாடு
வரும் டிச. 21, 22, 23-இல் பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாவட்ட மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாவட்டச் செயலர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம்பரிதி, இரா.சிசுபாலன், டி.எஸ்.ராமச்சந்திரன், சோ.அருச்சுணன் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், 22-ஆவது மாவட்ட மாநாட்டை பென்னாகரத்தில் சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டன. இதற்காக 51 பேரைக் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக எம்.மாதன், செயலராக எம்.ஆறுமுகம், பொருளராக எம்.தனபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், நிதிக் குழு, உணவுக் குழு, பிரசாரக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டன. டிச. 21-ஆம் தேதி பென்னாகரம் நகரில் செந்தொண்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.