பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தருமபுரி பட்டுக் கூடு அங்காடியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஏ.ரவிக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவியர் புவனா, பிரகதீஸ்வரி, கிருத்திகா, திவ்யா ஆகியோர் பட்டு வளர்ப்புக் கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்தும், பட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வளர்ச்சி ஊக்கிகள், கிருமிநாசினிகள் மற்றும் ஊட்ட மருந்துகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் பட்டு வளர்ப்பு விவசாயிகள், அலுவலர்கள், மாணவியர் கலந்துகொண்டனர்.