அரூர்-அச்சல்வாடி சாலையில் உள்ள லிங்காபுரம் ஏரிக் கால்வாயைத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர்-அச்சல்வாடி சாலையில் அமைந்துள்ளது லிங்காபுரம் ஏரி. இந்த ஏரியிலிருந்து நர்சனேரிக்கு செல்லும் இணைப்பு கால்வாயில் விவசாயிகளின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், நர்சனேரிக்கு மழைக் காலங்களில் நீர்வரத்து இல்லாமல் ஏரி வறண்டுள்ளது.
எனவே, லிங்காபுரம் மற்றும் நர்சனேரிக்கு செல்லும் ஏரிக் கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களைத் தூர்வாரி ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.