தருமபுரி நகருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் தருமபுரி துணை மின் நிலையத்தில் 110 கேவி மின்மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகள் இரு நாள்களும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை மட்டும் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தீ. சிவானந்தன் அறிவித்துள்ளார்.
இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
தருமபுரி நகரம், அரசு மருத்துவமனை முதல் பழைய தருமபுரி வரை பழைய புறவழிச்சாலை, பழைய தருமபுரி, பிடமனேரி, நூலஅள்ளி, கடகத்தூர், காமாட்சியம்மன் கோயில் தெரு, முக்கல்நாயக்கன்பட்டி, மூக்கனூர், குண்டல்பட்டி, மதிகோன்பாளையம், ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், வெள்ளோலை, குப்பூர், ரெட்டிஅள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.