மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு

அரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிவா (11) ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.

அரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிவா (11) ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
அரூர் வட்டம்,  மோப்பிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், ராதா தம்பதியரின் மகன் சிவா (11).  இவர்,  அரூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில்,  மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை, அரூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சேர்த்தனர். தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக தருமபுரி
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவரை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தபோது வழியில் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com