தேசிய நூலக வார விழா தொடக்கம்

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
50 -ஆவது தேசிய நூலக வார விழா நவ.14-ஆம் தேதி தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை தருமபுரி மாவட்ட நூலகத் துறை சார்பில் நடைபெறுகிறது. முதல்நாள் நிகழ்ச்சியாக,  மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி  மாவட்ட நூலகத் துறை மற்றும் நியூ செஞ்சூரி புத்தகச் சாலை சார்பில் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இருப்பு சரிபார்ப்பு அலுவலர் ஆர்.நந்தகுமார் வரவேற்றார். முதல்நிலை நூலகர் கோ.சேகர் தலைமை வகித்தார். தருமபுரி நகர அரிமா சங்கத் தலைவர் பி.அபிபுல்லா புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்து பேசினார்.
மாவட்ட கண்காணிப்பாளர் திருமலை குமரசாமி, இரண்டாம் நிலை நூலகர் மாதேஸ்வரன், மூன்றாம் நிலை நூலகர் த.தமிழ்ச்செல்வி மற்றும் மைய நூலக வாசகர்கள்,  பார்வையாளர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com