பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

அரூரை அடுத்த  கொளகம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

அரூரை அடுத்த  கொளகம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு  ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் கண் பரிசோதனைகளை மேற்கொண்டார். இதில் பள்ளி மாணவ,  மாணவிகள் , ஆசிரியர்கள் எஸ்.ஆர்.சக்தி, ஆர்.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பி.குழந்தைவேல் தலைமை வகித்தார். விழாவில், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள்,  வகுப்புத் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும்  வழங்கினார்.
பாப்பிரெட்டிப்பட்டி  ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், முன்னாள் பிரதமர் நேருவின்  ஓவியம்,  அவரது வாழ்க்கை வரலாறு, பேச்சுப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தலைவர் வி.முருகேசன்
பரிசுகள் வழங்கினார். விழாவில்,  பள்ளி செயலர் பிரு ஆனந்த் பிரகாஷ்,  மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com